மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது மக்களின் சொந்தக் காணிகள் முப்படையினரின் தேவைகளுக்காக தொடர்ச்சியாக சுவீகரிக்கப்படுகின்றமை நீடித்து வருகின்றது.
கடந்த காலங்களிலும் மக்களின் காணிகள் சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய முற்பட்ட போது மக்களின் கடும் எதிர்ப்பால் அந் நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன.
எனினும்இ அதன் தொடர்ச்சியாக மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மக்களுடைய காணிகள் கடற்படையின் முகாம் அமைப்பதற்காகச் சுவீகரிப்பு செய்வதற்காக அளவீடு செய்யப்படவுள்ளது.
இன்று திங்கட்கிழமை மண்டைதீவிலும் மறுநாள் செவ்வாய்க்கிழமை மண்கும்பானிலும் அளவீடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எனவேஇ எமது மக்களின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை 8.30 மணிக்கு மண்டைதீவிலும் நாளை காலை 8.30 மணிக்கு மண்கும்பானிலும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அணிதிரண்டு காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.