எதிர்வரும் 13 நாட்களுக்கு சூரியபகவான் சிம்ம ராசியில் இருப்பார். சூரிய கிரகத்தின் நிலை சாதகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட ஜாதகருக்கு அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
செப்டம்பர் 17 வரையிலான நேரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும் என ஜோதிட கணக்குகள் கூறுகின்றன.
இவர்கள் எந்த விதமான பிரச்சனைகளையும் சந்திக்க மாட்டார்கள். சூரியபகவானின் அருளால் வரும் 13 நாட்களுக்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு நிம்மதியான வாழ்வு இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். வியாபாரம் மேம்படும். நண்பரின் நிதி உதவியைப் பெறலாம். லாப வாய்ப்புகள் அமையும். வருமான நிலை திருப்திகரமாக இருக்கும். நீங்கள் பேசும் தாக்கம் அதிகரிக்கும். இதனால், காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நண்பரின் ஆதரவைப் பெறலாம்.
சிம்மம் : சிம்ம ராசிகளுக்கு பேச்சில் இனிமை இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் வேகமெடுக்கும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிகளுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தன்னம்பிக்கை மிகுதியாக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும். நண்பரின் உதவியைப் பெறலாம். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
தனுசு: தனுசு ராசிளுக்கு மிகவும் சாதகமான நேரம். மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளின் நிலை மேம்படும். மன நிம்மதி ஏற்படும். சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.