நேற்று (டிசம்பர் 22) முதல் அமுலுக்கு வரும் வகையில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) விநியோகத்தை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாக லாஃப் கேஸ் நிறுவனம் கூறுயுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் உள்ள முனைய வளாகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் LP எரிவாயுவின் தரம் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLSI) ஆகியவற்றின் அனுமதியைப் பெற்ற பின்னரே விநியோக செயல்முறை ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.