இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 15 மரணங்கள் நேற்று முன்தினம் (03) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் நேற்று (04) அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே 13,791 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 15 மரணத்துடன் இதுவரை 13,806 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மரணமடைந்த 15 பேரில் 08 பேர் ஆண்கள், 07 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.