இன்று (23) முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைத்து வீதிகளையும் உள்ளடக்கிய 11 இடங்களில் எழுமாறான ரெபிட் அன்டிஜென் (Rapid Antigen) உடனடி சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று (22) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் 11 இடங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வெளியேறும் இடங்களிலும் ரெபிட் அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோர் தொடர்பில் மேற்கொண்ட Rapid Antigen உடனடி சோதனையின் அடிப்படையில், 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் இதன்போது தெரிவித்தார்.