வவுனியா, பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை நேற்று முன்தினம் ஓமந்தை பொலிஸார் மீட்டிருந்தனர்.
குறித்த இருவரும் கடந்த 27ம் திகதி அவர்களது வீட்டில் இருந்து இரவு 12 மணியவிளவில் காணாமல்போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடி வந்த நிலையில், வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தாய், தனது குழந்தையுடன் வறுமை காரணமாக தற்கொலை செ ய்து கொண்டுள்ளதாக பிரதேசவாசிகள் கூறியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.