ரொறன்ரோவில், சுத்தியலால் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 8.45 மணியளவில், புளொர் யங் (Bloor-Yonge) சுரங்க நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரொறன்ரோ பொலிசார் விரைந்து சென்று காயமடைந்திருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.