யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்று மாலை திடீரென வீசிய சூழல் காற்றினால் அப்பகுதியில் உள்ள 09 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இன்று மாலை யாழில் வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் ஜே/136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் இன்று (ஜன-06) மாலை வீசிய சுழல் காற்றின் தாக்கத்தின் காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டஅனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சுழல் காற்றினால் வீடுகள் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தற்காலிகமாக தறப்பாள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.