கொழும்பு உச்சநீதிமன்ற கட்டடத் தொகுதியில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிகிறது.
தீயணைப்பு படைப்பிரிவின் 9 வண்டிகள் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு தீயணை;பு நடைவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கக் கூடும் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


