நாட்டில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
இலங்கையின் சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கைதிகள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படாதிருப்பது வேதனையானது.
தற்போது சிறைச்சாலைகளில் பரவும் கொரோனாத் தொற்றுக்கு தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பு அடிப்படையிலோ அல்லது பிணையிலோ விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.