இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்போஸ் நிகழ்ச்சி ஊடாக பிரபல்யம் அடைந்தார். இந்நிலையில் இவரது தந்தையார் மரியநேசன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது சடலம் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள நிலையில் இலங்கை வந்த லொஸ்லியா கொழும்பில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் தந்தையாரது இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம்திகதி லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் 52 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக இறந்ததை அடுத்து, அவரது சடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் இலங்கைக்கு கொண்டு வரப்படும் லொஸ்லியாவின் தந்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள் எனவும் லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.
அவரது சடலம் இலங்கைக்கு கொண்டு வரும் பட்சத்தில் திருகோணமலை அன்புவழிபுரம் பகுதியில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி அடுத்த வாரமளவில் லொஸ்லியாவின் தந்தையின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் எனவும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் லொஸ்லியாவின் சித்தப்பா நம்பிக்கை வெளியிட்டார்.
லொஸ்லியா தற்போது கொழும்மிலுள்ள ஹோட்டலொன்றில் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவடையவுள்ள நிலையில் பிசி ஆர் முடிவுகள் லொஸ்லியாவிற்கு சாதகமாக வரும் பட்சத்தில் லொஸ்லியா திருகோணமலையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்வார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தினை பூர்வீகமாக கொண்ட லொஸ்லியாவின் தந்தை கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் வாய்ப்பு தேடி கனடாவுக்கு சென்றதாக லொஸ்லியாவின் சித்தப்பா மேலும் தெரிவித்தார்.