தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தலைவர்
ஹரி ராஜ் – பிரியா திருமணத்திற்கு நடிகர் நேரில் சென்று வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் சூர்யா நற்பணி இயக்க அகில இந்திய கௌரவ தலைவர் ராஜ் சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், அகில இந்திய தலைவர் பரமு, அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில அமைப்பாளர் சுந்தர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஏ.ராஜ் மற்றும் சூர்யா நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.