கொரோனா தொற்று கிழக்கு மாகாணத்தில் 1,624 ஆக அதிகரித்துள்ளதாக திங்கட்கிழமை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்முனை சுகாதார பிரிவில் 966 பேரும் அம்பாறையில் 66 பேரும் மட்டக்களப்பில் 382 பேரும் திருகோணமலையில் 210 பேரும் அடங்கலாக 1,432 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 71 பேரும் ஓட்டமாவடி பிரிவில் 39 பேரும் வாழைச்சேனை பிரிவில் 06 பேரும் ஏறாவூர் பிரிவில் 19 பேரும் மட்டக்களப்பு பிரிவில் 29 பேரும் காத்தான்குடி பிரிவில் 158 பேரும் பட்டிப்பளை பிரிவில் 06 பேரும் வெல்லாவெளி பிரிவில் 05 பேரும் களுவாஞ்சிக்குடி பிரிவில் 35 பேரும் ஆரையம்பதி பிரிவில் 09 பேரும் செங்கலடி வவுனதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் தலா ஒருவருமாக மொத்தம் 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.