நாட்டில் மேலும் 3 கொவிட்19 மரணங்கள் நேற்று பதிவாகின.
இதன்படி கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றால் மரணித்துள்ளார்.
கண்டியில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்றுறுதியனதை அடுத்து தெல்தெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கொவிட் நிமோனியா நிலை, இருதய நோய் மற்றும் உயர் குருதி அழுத்தம் காரணமாக கடந்த 16 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவரும் கொவிட்-19 தொற்றால் மரணித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தொற்றுறுதியானது.
இதனையடுத்து அவர் தேசிய தொற்று நோய் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொவிட் நிமோனியா நிலை காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஆண்டிகம பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக நோய் நிலைமை மற்றும் கொவிட் நிமோனியா நிலை என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.