யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (07) முற்பகல் அரியாலை நாவலடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்களிலில் பயணித்த நபர் இரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போதுஇ தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என தெரிவிக்கப்பட்டது.
உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.