இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (15) அறிவித்துள்ளார்.
252ஆவது மரணம்
கிரிபத்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்று விஞ்ஞானப் பிரிவுக்கு (IDH) மாற்றப்பட்டு அங்கு நேற்று (15) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி (Bronkitis) நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
253ஆவது மரணம்
கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று (15) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
254ஆவது மரணம்
நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர், நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இரணவில சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு கடந்த புதன் கிழமை (13) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
255ஆவது மரணம்
கொழும்பு 15 (மோதறை/ மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர், அவரது வீட்டில் கடந்த புதன் கிழமை (13) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 251 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 04 மரணங்களுடன் இதுவரை 255 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.