இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (13) அறிவித்துள்ளார்.
245ஆவது மரணம்
பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று முன்தினம் (12) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமாக உக்கிரமடைந்த இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
246ஆவது மரணம்
கொழும்பு 15 (மட்டக்குளி/ மோதறை) பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் (12) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை மற்றும் சுவாச தொகுதியில் உக்கிர தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
247ஆவது மரணம்
கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (12) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 244 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 03 மரணங்களுடன் இதுவரை 247 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.