நாட்டில் நாளை மறுதினம் தமிழ், சிங்கள மக்களால் தை பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில் மிக அவதானமாக வீடுகளில் இருந்து கொண்டாடுமறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையினை இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் முன்வைத்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அரசின் கொரோனா கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.
அத்துடன் தைப்பொங்கல் நாளில் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.