இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (11) அறிவித்துள்ளார்.
233ஆவது மரணம்
வெலிக்கடை சிறையிலிருந்து 52 வயதான ஆண் கைதி ஒருவர், வெலிக்கடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் கடந்த புதன்கிழமை (06) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
234ஆவது மரணம்
இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (07) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
235ஆவது மரணம்
மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (08) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
236ஆவது மரணம்
கொழும்பு 12 (புதுக்கடை/ வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் கடந்த வெள்ளிக்கிழமை (08) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் வலிப்பு நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
237ஆவது மரணம்
கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று (10) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
238ஆவது மரணம்
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான பெண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று முன்தினம் (10) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.
239ஆவது மரணம்
களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு (IDH) மாற்றப்பட்டு அங்கு நேற்று முன்தினம் (10) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
240ஆவது மரணம்
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று முன்தினம் (10) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 232 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 08 மரணங்களுடன் இதுவரை 240 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.