
“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி அகற்றப்பட்டதிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
உண்மையில் அது நடந்து இருக்க கூடாதென மறுதலித்துள்ளார் சுரேன் ராகவன்.
முள்ளிவாய்க்கால் நினைவத்தூபியை அகற்ற பல்கலைக்கழக பேரவையில் இருக்கின்ற சுரேன் ராகவன் மற்றும் ஈ.பி.டி.பியை சேர்ந்த றூசாங்கன் என்போர் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்ததாக மாணவ தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதனை சுரேன் ராகவன் மறுதலித்த போதும் ஈபிடிபி தரப்பு மௌனம் காத்தே வருகின்றது.