இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (08) அறிவித்துள்ளார்.
223ஆவது மரணம்
கொழும்பு 14 (கிராண்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, ரம்புக்கணை மாவட்ட வைத்தியசாலைக்கும் பின்னர் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவிற்கு மாற்றப்பட்டு நேற்று (07) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
224ஆவது மரணம்
இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (07) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
225ஆவது மரணம்
ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதான பெண் ஒருவர், அவரது வீட்டில் கடந்த 06 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 222 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 03 மரணங்களுடன் இதுவரை 225 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.