இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து செல்லும் நிலையால் இலங்கை ஆபத்தான நிலையை நோக்கிச் செல்வதை உணர்ந்த உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கை மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை பெற்று வழங்க முன்வந்துள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு கொவிட் – 19 தடுப்பு மருந்து வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.