இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 185ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (24) அறிவித்துள்ளார்.
185ஆவது மரணம்
அகலவத்தையைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர், பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் குருதி விசமடைவு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 184 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மரணத்துடன், இதுவரை 185 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.