இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 07 மரணங்கள் நேற்று (05) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
131ஆவது மரணம்
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 91 வயதான ஆண் ஒருவர், வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 03 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
132ஆவது மரணம்
சிறைச்சாலை கைதியான 53 வயதான ஆண் ஒருவர், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (01) நிகழ்ந்துள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமான நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
133ஆவது மரணம்
கொழும்பு 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான பெண் ஒருவர், தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் (IDH) அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (04) நிகழ்ந்துள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமான நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
134ஆவது மரணம்
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான பெண் ஒருவர், வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஏற்பட்டுள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட நெஞ்சு தொற்று, உக்கிரமான நுரையீரல் தொற்று நோய் நிலை மற்றும் இருதன நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
135ஆவது மரணம்
கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 84 வயதான பெண் ஒருவர், வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (04) நிகழ்ந்துள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமான நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
136ஆவது மரணம்
வெலிக்கடை சிறைக்கைதியான, 66 வயதான ஆண் ஒருவர், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த புதன்கிழமை (02) நிகழ்ந்துள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
137ஆவது மரணம்
வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான பெண் ஒருவர், தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவில் (IDH) சிகிச்சை பெற்று வந்த வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம், நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட்-19 தொற்று காரணமான நியூமோனியா நிலையுடன் ஏற்பட்ட அவையவங்கள் செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 130 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 07 மரணங்களுடன், இதுவரை 137 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.