இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (09) அறிவித்துள்ளார்.
226ஆவது மரணம்
கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான பெண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் கடந்த 07 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர ஆஸ்த்துமா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
227ஆவது மரணம்
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று (09) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
228ஆவது மரணம்
வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நேற்று (09) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா உடனான குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
229ஆவது மரணம்
ஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்றுமுன்தினம் (08) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 225 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 04 மரணங்களுடன் இதுவரை 229 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.