இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (16) அறிவித்துள்ளார்.
158ஆவது மரணம்
கொலன்னாவையைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 14ம் திகதி மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் கொவிட்-19 தொற்று காரணமான நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
159ஆவது மரணம்
கொழும்பு 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர், கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (15) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், குருதி விசமடைந்தமை, அவயவங்கள் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
160ஆவது மரணம்
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (16) மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, குருதி விசமடைந்தமையினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றம் உடல் அவயவங்கள் செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 157 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 03 மரணங்களுடன், 160 கொரோனா மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.