இன்று மட்டும் 525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்த 780 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை 39 ஆயிரத்து 661 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதுடன் இன்னும், ஆறாயிரத்து 900 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் இன்று மூவரின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் 222ஆக அதிகரித்துள்ளன.