திட்டமிட்டவாறு இன்று வரவிருந்த சுற்றுலா குழுக்களுடனான அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவையடுத்து சுற்றுலாப் பயணிகளை மீண்டும் நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு, இன்றைய தினம் சுற்றுலாப் பயணிகளுக்கான விமானப் போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திட்டமிட்டிருந்தவாறு இலங்கைக்கு இன்று வரவிருந்த சுற்றுலாக் குழுக்களுடனான அனைத்து விமானசேவைகளும் இரத்துச் செய்யப் பட்டுள்ளதாக என கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலாக் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது.
இதன்படி இன்று 200 இற்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் விமானங்கள் கட்டுநாயக்கா மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு வருகை தரவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐரோப்பா முழுவதும் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் முன்னார் திட்டமிடப்பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.