கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பணிகளை வரையறுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைகளின் பேரில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிர்வகிக்க 25 மாவட்டங்களுக்கும் இராணுவ அதிகாரிகள் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர், மேலும் அவர்களுக்கு டிசம்பர் 31, 2020 அன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் படி சுகாதார நெறிமுறைகளை செயல்படுத்துவதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும்.